Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னியாஸ்திரியை விபச்சாரி என விமர்சித்த எம்.எல்.ஏ

கன்னியாஸ்திரியை விபச்சாரி என விமர்சித்த எம்.எல்.ஏ
, ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (12:05 IST)
கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கன்னியாஸ்திரியை எம்.எல்.ஏ ஒருவர் விபச்சாரி என விமர்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஃப்ராங்கோ மூலக்கல் என்ற பிஷப் தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
webdunia
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சுயேட்சை எம்.எல்.ஏ  ஜார்ஜ், அந்த கன்னியாஸ்திரி ஒரு விபச்சாரி ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறார். 12 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்யும் போது புகார் அளிக்காத கன்னியாஸ்திரி ஏன் திடீரென புகார் அளித்தார். இதில் வேறுஎதோ ஒன்று இருக்கிறது என கூறினார். எம்.எல்.ஏ வின் இந்த கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திட்டாம.. அடிக்காம.. குணமா சொல்லனும் - வைரலாகும் சிறுமியின் வீடியோ