Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா பட பாணியில் கொலையாளியை காப்பாற்றிய கூட்டாளிகள்

ஹரியானா
Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (14:45 IST)
டெல்லியில் போலீஸார் கண்களில் மிளகாய் பொடியை தூவி,  கொலையாளியின் கூட்டாளிகள் கொலையாளியை மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   
ஹரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தீப், திடீரென நெஞ்சு வலி காரணமாக போலீஸார் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவப் பரிசோதனை முடிந்து சந்தீப்பை மீண்டும் அழைத்து வந்த போலீஸார் மீது வெளியே இருந்த சந்தீப்பின் கூட்டாளிகள் மிளகாய் பொடியை வீசி ஏறிந்தனர்.
 
இதையடுத்து போலீஸார் அலறி துடித்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு சந்தீப்பின் கூட்டாளிகள் அவனை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்றனர். சந்தீப்பை மருத்துவமனை அழைத்துச் சென்ற போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் தப்பியோடிய சந்தீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

இனி தமிழ்நாடு முழுக்க ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் வருவாங்க!? - மு.க.ஸ்டாலின் பக்காவா போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுப்பு தொடக்கம்.. 48 மணி நேரத்தில் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments