Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்திரத்தில் பாம்பின் தலையை கடித்து மென்று துப்பிய விவசாயி

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (14:21 IST)
உத்தரபிரதேசத்தில் விவசாயி ஒருவர் தன்னை கடித்த பாம்பின் தலையை கடித்து மென்று துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
உத்தரபிரதேச மாநிலம் சுக்லாபூர் பாகர் கிராமத்தைச் சேர்ந்த சோனேலால் என்பவர் தனது தோட்டத்தில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவரது அருகில் பாம்பின் உடலும் கிடந்துள்ளது. இதை பார்த்த அக்கம்பக்கதினர் சோனேலாலை பாம்பு கடித்துவிட்டது என நினைத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 
மருத்துவமனையில் மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவரது உடலில் பாம்பு கடித்த தடயம் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் அவருக்கு விஷ முறிவு மருத்து கொடுத்து அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். கண்விழித்த சோனேலால் நடந்த சம்பவம் பற்றி கூறியது மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்தது. அவர் கூறியதாவது:-
 
நான் கால்நடைகளை அழைத்துக்கொண்டு என் தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு என்னை கடித்துவிட்டது. இதனால் ஆத்திரத்தில் அந்த பாம்பை பிடித்து அதன் தலையை மென்று துப்பிவிட்டேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments