Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்கொடுமை: ஹீரோவாக மாறி இளம்பெண்ணை காப்பாற்றிய நாய்!!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (13:00 IST)
மத்தியபிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமையிலிருந்து நாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்தியபிரதேச மாநிலம் சோலா பகுதியை சேர்ந்தவர் ஷோ. ஷோ தனது கணவருடன் வசித்து வந்தார். ஷோவின் கணவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஷோவிற்கு நாய்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் வசிக்கும் அதே தெருவியில் உள்ள நாய் ஒன்றிற்கு சாப்பாடு போட்டு கவனித்து வந்துள்ளார். அந்த நாயும் ஷோவிற்கு விஸ்வாசமாக இருந்துள்ளது.
 
இந்நிலையில் நேற்று ஷோவின் கணவர் வேலைக்கு சென்ற பின்னர், அவரது வீட்டிற்குள் புகுந்த பக்கத்து வீட்டுக்காரனான சுனில் என்பவன் ஷோவை கற்பழிக்க முயன்றான். ஷோ பயத்தில் கத்தவே, சம்பவ இடத்திற்கு ஓடி வந்த நாய் அந்த நபரை தாக்கியது. அப்போது சுனில் தான் வைத்திருந்த கத்தியால் நாயை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த நாய் விடாமல் சுனிலை தாக்கியது.
 
இறுதியில் நாயின் தாக்குதலை சமாளிக்க முடியாத சுனில் அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதுகுறித்து உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சுனிலை தேடி வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த நாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது. நாயின் விஸ்வாசத்தை பார்த்து நெகிழ்ந்துபோன அப்பகுதி மக்கள் விரைவில் நாய் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்