Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல முறைகேடுகள்: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ரிட் மனு தாக்கல்

பல முறைகேடுகள்: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ரிட் மனு தாக்கல்
, புதன், 29 செப்டம்பர் 2021 (07:28 IST)
நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் ரிட் மனு தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடதக்கது. தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் தற்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது
 
ஆள்மாறாட்டம், எலக்ட்ரானிக் பொருட்களை வைத்து தேர்வு எழுதுதல் உள்பட பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வு எழுதிய சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

23.35 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!