கிளாஸ் லீடர் ஆகாததால் 9-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (16:14 IST)
கிளாஸ் லீடராக தேர்வு செய்யப்படாததால் 9 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர்.
 
பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்பவரது மகன் துருவ்ராஜ்(14)  ஆர் ஆர் நகரிலுள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தான். 
 
இந்நிலையில் அவன் வகுப்பில் கிளாஸ் லீடர் பதவிக்காக போட்டி நடைபெற்றது. இதில் 4 மாணவர்கள் பங்குகொண்டனர். எனினும் துருவ்ராஜ் போட்டியில் தோல்வியுற்றான். இதனால் மனமுடைந்த அவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் தான் மாணவனின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். தற்பொழுது கஷ்டப்பட்டு வளர்த்த மகன், தற்கொலை செய்து கொண்டதால் அவரது தாய் கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சை கலங்க வைத்தது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சரவை கூட்டத்திற்கு வர முடியாது: மெசேஜ் அனுப்பிய அதிகாரி 24 மணி நேரத்தில் சஸ்பெண்ட்

மைசூர் சில்க் உற்பத்தியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்: முதலமைச்சர் சித்தராமைய்யா தலையிட கோரிக்கை..!

2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற திமுக நிர்வாகி கைது! கிருஷ்ணகிரியில் பயங்கரம்:

மத்திய கிழக்கு போர் பதற்றம்: 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; துபாய் விமான நிலையத்தில் சிக்கிய பி.வி. சிந்து..!

துபாய் மீது ஈரான் அதிரடி தாக்குதல்: உலக புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் சேதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments