Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வோடபோன் ஐடியா லிமிடெட்: மத்திய அரசு ஒப்புதல்!

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (15:36 IST)
இந்திய டெலிகாம் சந்தையில், ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களை அடுத்து வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் மக்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படும் நெட்வொர்க்காக உள்ளது.  
 
இந்நிலையில், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைப்பு குறித்து பேச்சு எழுந்தது. இதற்காக தீவிர முயற்சிகளும் செயல்படுத்தப்பட்டன. இதற்கு பலனாக இந்த இணைப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
 
வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதாக தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தகவல் வெளியிட்டுள்ளார். 
 
இது குறித்து வோடபோன் நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி விட்டோரியோ கோலோவ் பின்வருமாறு கூறினார், வரும் அக்டோபர் மாதம் வரை இந்த பொறுப்பில் இருப்பேன் அதற்குள் புதிய நிறுவனமான வோடபோன் ஐடியா உருவாகும் என தெரிவித்தார்.
 
இந்த இரு நிறுவனங்கள் இணைந்தால், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உயரும். புதிய நிறுவனத்தின் மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடியாகவும், 35 சதவீத சந்தை மற்றும் 43 கோடி வாடிக்கையாளர்களும் இருப்பார்கள் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ஆப்பு வைத்த அதிபர் ட்ரம்ப்! சூப்பர்மார்கெட்டை கபளீகரம் செய்த அமெரிக்க மக்கள்! - ஒரே வரியில் கதிகலங்கிய அமெரிக்கா!

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments