Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொட்டாவி விட்டது தப்பா? மாணவனை புரட்டி எடுத்த ஆசிரியை மீது வழக்கு

கொட்டாவி விட்டது தப்பா? மாணவனை புரட்டி எடுத்த ஆசிரியை மீது வழக்கு
, செவ்வாய், 26 ஜூன் 2018 (12:39 IST)
மகாராஷ்டிராவில் பள்ளி மாணவன் ஒருவன் பிரேயரின் போது கொட்டாவி விட்டதால், அவனை ஆசிரியர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவரும் 6 ஆம் வகுப்பு மாணவன் பள்ளி பிரேயரின் போது கொட்டாவி விட்டுள்ளான். இதனைப் பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியை, மாணவனை கண்டபடி அடித்துள்ளார்.
 
இதுகுறித்து மாணவன் தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதனையடுத்து மாணவனின் தந்தை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் கொட்டாவி வருவது இயற்கை அதற்கு போய் எனது மகனை அடிப்பீற்களா எனக் கேட்டுள்ளார். தப்பு செய்தால் அடிப்போம் என தலைமை ஆசிரியை மூஞ்சு கொடுக்காமல் பேசியுள்ளார்.
webdunia
இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் தந்தை, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் ஆசிரியை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம்!