Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

21 நாள் குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி!

baby
, வெள்ளி, 4 நவம்பர் 2022 (21:21 IST)
பிறந்த 21 நாள் மட்டுமே ஆன குழந்தையின் வயிற்றில் எட்டு கருக்கள் இருந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 21 நாட்களுக்கு முன்னர் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் வயிற்றில் எட்டு கருக்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
கடந்த 10ஆம் தேதி இந்த குழந்தை பிறந்ததாகவும் குழந்தையின் வயிற்றில் கட்டி இருப்பதாக எக்ஸ்ரே மூலம் கண்டறிந்த மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை செய்ய பரிசோதித்த போதுதான் அந்த குழந்தையின் வயிற்றில் இருந்தது கட்டி அல்ல கருக்கள்  என்று தெரிய வந்தது 
 
இதனை அடுத்து அறுவை சிகிச்சை செய்து அந்த கருக்கள் அகற்றபட்டதாக தெரிகிறது. உலகில் இதுவரை குழந்தையின் வயிற்றில் எட்டு கருக்கள் இருந்ததாக எங்குமே தகவல் வெளியாகவில்லை என்பதும், மிகவும் அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பாஜகவில் இணைவார்கள்: புகழேந்தி பேட்டி