Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பாஜகவில் இணைவார்கள்: புகழேந்தி பேட்டி

pughazhendhi
, வெள்ளி, 4 நவம்பர் 2022 (21:08 IST)
விரைவில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவார்கள் என்று புகழேந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணி என இரண்டு பிரிவாக உள்ளது
 
இந்த நிலையில் பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் புகழேந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது எடப்பாடி பழனிசாமி உடன் இருப்பவர்கள் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைவார்கள் என்று அவர் தெரிவித்தார் 
 
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தவிர வேறு யாருக்கும் கிடையாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தங்கமணி வேலுமணி இவர்களில் யார் நினைத்தாலும் அந்த எண்ணம் ஈடேறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். புகழேந்தியின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடு முழுவதும் சலூன் கடைகளை ஆரம்பிக்கும் ரிலையன்ஸ் நிறுவனம்!