Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு 7 வீரர்கள் தகுதி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு- அமைச்சர் உதயநிதி

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு 7 வீரர்கள் தகுதி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு- அமைச்சர் உதயநிதி
, செவ்வாய், 20 ஜூன் 2023 (13:32 IST)
விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கி வெற்றி நடைபோடுவதற்கு உதாரணமாகத் திகழும் நம் வீரர் வீராங்கனையருக்கு வாழ்த்துகள்  என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி  நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு மக்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு சாதிக்க அரசு பலவகையில் உதவி வருகின்றது.

’’ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 15-ம் தேதி முதல் 19 வரை நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்தமிழக வீரர்கள் பதக்கங்கள் பெற்றுள்ளனர்.
இதுபற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

’’ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 15-ம் தேதி முதல் 19 வரை நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 9 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்களை பெற்று, 127 புள்ளிகளுடன் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.  இதில் சிறப்பாக விளையாடி, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு 7 வீரர்கள் தகுதி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.

விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கி வெற்றி நடைபோடுவதற்கு உதாரணமாகத் திகழும் நம் வீரர் வீராங்கனையருக்கு வாழ்த்துகள்’’  என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன்”: மதுரை திமுக நிர்வாகி மிரட்டல்