Webdunia - Bharat's app for daily news and videos

Install App

64 வயதில் நீட் எழுதி காலெஜ் செல்லும் முதியவர்! – ஒடிசாவில் அதிசய சம்பவம்!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (11:05 IST)
ஒடிசாவில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 64 வயதான ஜெய்கிஷோர் பிரதான் பாரத் ஸ்டேட் வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். சமீபத்தில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வான நீட் தேர்வை எழுதிய ஜெய்கிஷோர் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.

இவருக்கு மாநில அரசின் வீர் சுரேந்திர சாய் பல்கலைகழகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது. வயதான நபர் ஒருவர் நீட் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியின் முதலாமாண்டு வகுப்பில் அடியெடுத்து வைப்பது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments