Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிருக்கு அடக்கமா சரக்கு அடிக்காதீங்க! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (10:50 IST)
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிர் மேலும் அதிகரிக்க உள்ள நிலையில் குளிருக்கு இதமாக மதுபானங்கள் அருந்த வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை வேளைகளிலேயே வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் மேலும் பனிமூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் “டிசம்பர் 29 முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குளிர் மேலும் அதிகரிக்கும். எனவே மக்கள் தேவையின்றி பொது வெளியில் நடமாட வேண்டாம். குளிரை எதிர்கொள்ள வைட்டமின் சி உள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஆல்கஹால் பானங்கள் அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் குளிர்காலங்களில் மக்கள் மதுபானங்களை அருந்த வேண்டாம்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

அடுத்த கட்டுரையில்
Show comments