Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குளிருக்கு அடக்கமா சரக்கு அடிக்காதீங்க! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Advertiesment
National
, ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (10:50 IST)
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிர் மேலும் அதிகரிக்க உள்ள நிலையில் குளிருக்கு இதமாக மதுபானங்கள் அருந்த வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை வேளைகளிலேயே வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் மேலும் பனிமூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் “டிசம்பர் 29 முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குளிர் மேலும் அதிகரிக்கும். எனவே மக்கள் தேவையின்றி பொது வெளியில் நடமாட வேண்டாம். குளிரை எதிர்கொள்ள வைட்டமின் சி உள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஆல்கஹால் பானங்கள் அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் குளிர்காலங்களில் மக்கள் மதுபானங்களை அருந்த வேண்டாம்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்னத்தை முடக்க சதி; வாழ்வா சாவா நிலையில் அதிமுக! – அமைச்சர் எச்சரிக்கை!