Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாவோஸ்யிடுகள் சுட்டுக் கொலை... தொடரும் தேடுதல் வேட்டை!

மாவோஸ்யிடுகள் சுட்டுக் கொலை... தொடரும் தேடுதல் வேட்டை!
, திங்கள், 27 டிசம்பர் 2021 (11:42 IST)
தெலங்கானா மற்றும் சட்டீஸ்கர் எல்லைப்பகுதியில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

 
தெலங்கானா மற்றும் சட்டீஸ்கர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் நக்ஸலைட் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த நக்ஸல் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  
 
சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இரண்டு வெடிபொருட்களை  போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் இரு மாநில போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் படையினரும் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீறி வந்த லாரி அரசு பேருந்தில் மோதி விபத்து! – கோவையில் பரபரப்பு!