Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 லட்சம் தடுப்பூசிகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

6 லட்சம் தடுப்பூசிகள் -  அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
, வியாழன், 1 ஜூலை 2021 (23:41 IST)
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தமிழ்நாட்டில்  நிலவிய நிலையில் இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஒரு முக்கிய தகவல்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை தீர்க்க மத்திய அரசிடம்  வாங்கிவருகிறோம். இன்று இரவுக்குள் சுமார்  6 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படங்களை வெளியிட புதிய ஓடிடி தளம்…அரசு முயற்சி !