Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் 50 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா

மீண்டும் 50 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா
, வியாழன், 1 ஜூலை 2021 (09:50 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தினசரி பாதிப்புகள் மீண்டும் 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,04,11,634 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1005 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  3,99,459 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,94,88,918 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 5,23,257 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா? – சர்ச்சைக்கு மத்திய அரசு விளக்கம்!