Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத் தீ விபத்தில் 17 பேர் பலி: பலியானவர்களுக்கு 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர்

Siva
ஞாயிறு, 18 மே 2025 (15:15 IST)
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் இதுவரை 17 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இறந்தவர்களில் நான்கு பேர் பெண்கள் என்றும், இரண்டு பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது. மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், தீ விபத்தில் பலியான குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
 
இந்த தீ விபத்து தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜூலை 1-ஆம் தேதி முதல் 3.16% மின்கட்டண உயர்வா? பொதுமக்கள் அதிர்ச்சி..!

சென்னை சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த கார்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஜனவரி மாதமே பஹல்காம் சென்ற கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா.. திடுக்கிடும் தகவல்..!

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments