Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபியில் சாராயம் குடித்த 13 பேர் பலி: 5 பேர் கைது

Webdunia
திங்கள், 21 மே 2018 (15:41 IST)
உபியில் விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியான சம்பவத்தில் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
 
உத்தரபிரேதச மாநிலத்தில் உள்ள துல்கான் கிராமத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் அரசு மதுபான கடையில் பலர் சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு நேற்று வரை 9 பேர் உயிரிழந்தனர்
 
இதனையடுத்து, பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தை அடுத்து சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும், 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு காரணமான அந்த மதுபான கடை உரிமையாளர்கள் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் உத்தரபிரேதச அரசு, பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பாராசிட்டாமல் உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு தடை! - கர்நாடக அரசு அதிரடி!

இருசக்கர வாகனங்களுக்கு இனி டோல்கேட் கட்டணமா? - NHAI அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments