Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபியில் சாராயம் குடித்த 13 பேர் பலி: 5 பேர் கைது

Webdunia
திங்கள், 21 மே 2018 (15:41 IST)
உபியில் விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியான சம்பவத்தில் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
 
உத்தரபிரேதச மாநிலத்தில் உள்ள துல்கான் கிராமத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் அரசு மதுபான கடையில் பலர் சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு நேற்று வரை 9 பேர் உயிரிழந்தனர்
 
இதனையடுத்து, பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தை அடுத்து சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும், 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு காரணமான அந்த மதுபான கடை உரிமையாளர்கள் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் உத்தரபிரேதச அரசு, பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments