Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

12 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (08:43 IST)
12 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளாக பணிபுரியும் 12 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர்கள் விசாரணை செய்யும் வழக்குகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 32 நீதிபதிகள் உள்ளனர். இதில் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு நீதிபதிகள் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் 12 நீதிபதிகள் தற்போது தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து காணொளி மூலம் மட்டுமே விசாரணை நடைபெற்று வருவதாகவும் இருப்பினும் நீதிபதிகளில் பற்றாக்குறையால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
நீதிபதிகள் மட்டுமின்றி நீதிமன்ற ஊழியர்கள் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தின் பல்வேறு பணிகள் முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உபி தேர்தல்: முதல்வர் வேட்பாளர் அகிலேஷ் யாதவ் போட்டியா?