Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏழை தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஏழை தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு  - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
, வியாழன், 26 மார்ச் 2020 (14:42 IST)
ஏழை தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் நிவாரண தொகை ஒதுக்கீடு

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறதுஇந்த நிலையில் நாடு
முழுவதும் அடுத்த 21 நாட்களும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுஇதனால் ஏழை எளிய மக்கள் தினுமும் கூலி வேலை செய்யும் மக்கள் உணவுக்கு அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளதுஇதற்காக பலரும் உதவி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார்.

அதில் , ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்யும்.
ஏழை எளிய தொழிலாளர்களுக்கு 1.70 லட்சம் கோடி நிவாரணத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் இடம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அரசு உதவும்.
மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு செய்யப்படும்.
சுகாதாரம் தூய்மை பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவை சமாளிக்க மக்களுக்கு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு