Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிள்ளை குட்டிகளையும், புருஷனையும் பத்தரமா பாத்துகோங்க... ராமதாஸ் டிவிட்!!

பிள்ளை குட்டிகளையும், புருஷனையும் பத்தரமா பாத்துகோங்க... ராமதாஸ் டிவிட்!!
, வியாழன், 26 மார்ச் 2020 (11:47 IST)
கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள் தான் என பாமக தலைவர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-க்கும் அதிகமான உள்ளது. எனவே இதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    
 
இன்று இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள் தான் என பாமக தலைவர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை போட்டுள்ளார். அதில் அவட் குறிப்பிட்டுள்ளதாவது... 
 
ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள் தான். கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு ஆணையை வீட்டு அளவில் செயல்படுத்தும் கடமையும், பொறுப்பும் இல்லத்தரசிகளுக்கு உண்டு. அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும். 
 
குடும்பத் தலைவரும், குழந்தைகளும் வீட்டு வாசலை விட்டு வெளியே கால்களை எடுத்து வைக்க குடும்பத் தலைவிகள் அனுமதிக்கக் கூடாது. வெளியில் சென்றால் ‘‘கொரோனா நோயை கொள்முதல் செய்யப் போகிறீர்களா?’’ என்று எச்சரித்து தடுத்து நிறுத்த வேண்டும். கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள் தான்! என பதிவிட்டுள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு போட்டா மட்டும் கட்டுப்படுத்த முடியாது! – உலக சுகாதார அமைப்பு