Publish Date: Fri, 02 Jun 2023 (09:42 IST)
Updated Date: Fri, 02 Jun 2023 (09:44 IST)
இந்திய பங்குச்சந்தை நேற்று சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் உச்சம் சென்றுள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதும் மீண்டும் சென்செக்ஸ் 63 ஆயிரத்தை நெருங்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
ஆனால் இடையிடையே ஒரு சில நாட்கள் மட்டும் பங்குச்சந்தை சரிவில் உள்ளது. இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் உயர்ந்து 62,620 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்ஃபி சுமார் 65 புள்ளிகள் உயர்ந்து 18,550 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒமொ வருங்காலத்திலும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்