Publish Date: Fri, 26 May 2023 (10:04 IST)
Updated Date: Fri, 26 May 2023 (10:05 IST)
சந்தை கடந்த இரண்டு நாட்களாக இறங்கிய நிலையில் இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 225 புள்ளிகள் உயர்ந்து 62,100 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 18,381 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
கடந்த இரண்டு நாட்கள் ஆக பங்குச்சந்தை சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று ஒரே நாளில் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாரத்தின் கடைசி நாளான இன்று மதியத்திற்கு மேல் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.