Publish Date: Mon, 20 Mar 2023 (09:38 IST)
Updated Date: Mon, 20 Mar 2023 (17:46 IST)
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று திடீரென 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்கள் ஆகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்குத்துடன் இருந்து வருகிறது என்பதும் இதனால் புதிதாக முதலீடு செய்பவர்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்றுமுன் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் 550 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்து உள்ளது என்பதும் தற்போது 57,435 என்ற புள்ளிகளில் வர்த்தகமாய் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச்சந்தையான நிப்டி 165 புள்ளிகள் சரிந்து 16,935 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை இன்னும் சில மாதங்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் புதிதாக முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது