Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச்சந்தையில் இன்று என்ன நிலவரம்.. இன்றைய சென்செக்ஸ் நிப்டி எவ்வளவு?

share

Siva

, திங்கள், 5 பிப்ரவரி 2024 (10:44 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த வாரம் பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்றது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சற்றுமுன் வர்த்தகம் தொடங்கியுள்ள நிலையில் குறைந்த அளவு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வெறும் 20 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 72,127 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 21,295 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
 
இன்றைய பங்குச்சந்தை மந்தமாக இருந்தாலும் இந்த வாரம் பங்குச்சந்தை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், பேங்க் பீஸ், கோல்டு பீஸ் ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் சிப்லா, ஐடி பீஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!