Publish Date: Wed, 31 Jan 2024 (10:47 IST)
Updated Date: Wed, 31 Jan 2024 (10:49 IST)
பங்குச்சந்தை நேற்று முன் தினம் 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் நேற்று திடீரென 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இந்த நிலையில் இன்று பங்கு சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 335 புள்ளிகள் உயர்ந்து 71,467 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை யான நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 21,615 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது,.
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், பேங்க் பீஸ், சிப்லா, கோல்ட் பீஸ், ஐடி பீஸ், ஐடிசி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் மணப்புரம் உள்ளிட்ட சில பங்குகளின் விலை குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.