Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் உச்சம் சென்ற பங்குச்சந்தை.. ஜாக்பாட் அடித்த முதலீட்டாளர்கள்..!

share
, வியாழன், 14 டிசம்பர் 2023 (11:29 IST)
பங்குச்சந்தை இன்று ஒரே நாளில் உச்சம் சென்றதை அடுத்து முதலீட்டாளர்கள்  ஜாக்பாட் நடித்துள்ளனர்  
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 800 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து உள்ளது. 
 
சற்றுமுன் 750 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் 70 ஆயிரத்து 429 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 233 புள்ளிகள் அதிகரித்து 21,159 என்ற போட்டிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
திடீரென சென்செக்ஸ் 70 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளதை அடுத்த முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலையுயும் அதிகரித்து பங்குச்சந்தையும் அதிகரித்துள்ளதால் தங்கம் மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1000 உயர்வா?