Publish Date: Tue, 12 Dec 2023 (11:35 IST)
Updated Date: Tue, 12 Dec 2023 (11:37 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இன்றி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் வெறும் 25 புள்ளிகள் மட்டுமே சார்ந்து 47290 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி வெறும் 5 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து இருவத்தி 20,002 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்காது என்றும் எனவே ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் அமைதியாக காத்திருக்கவும் என்றும் புதிதாக யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பங்குச்சந்தை முதலீடு என்பது நீண்ட கால அடிப்படையில் இன்னும் அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.