Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேற்றைய சரிவில் இருந்து மீண்டது பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

share

Siva

, வியாழன், 12 செப்டம்பர் 2024 (10:16 IST)
நேற்று பங்கு சந்தை ஆரம்பத்தில் ஏற்றத்தில் இருந்தாலும் அதன் பின்னர் மதியத்திற்கு மேல் திடீரென சரிந்தது என்பதும் வர்த்தக முடிவின் மீது 350 பள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்றைய சரிவிலிருந்து இன்று பங்குச்சந்தை மீண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 269 புள்ளிகள் உயர்ந்து 81 ஆயிரத்து 797 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 25,016 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தானி லீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஐசிஐசி வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கும் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?