Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 நாள் சரிவுக்கு பின் ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. ஆனால் நேற்று போல் ஆகிவிடுமா?

share

Siva

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (09:45 IST)
இந்திய பங்குச் சந்தை இரண்டு நாள் சரிவுக்கு பிறகு இன்று ஏற்றம் கண்டுள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். 
 
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்களுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று பங்குச் சந்தை காலையில் உயர்ந்தாலும், அதன் பிறகு மதியத்திற்கு மேல் சரிய ஆரம்பித்தது என்பதும் 100 புள்ளிகளுக்கு மேல் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 778 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 360 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. நேற்றும் இதே போல் தான் வர்த்தக ஆரம்பத்தில் 700 புள்ளிகள் உயர்ந்த நிலையில் அதன் பின்னர் திடீரென சரிந்தது. அதேபோல் இன்றும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் தேசிய பங்குச் சந்தை நிப்டி இன்று 259 புள்ளிகள் உயர்ந்து 24, 247 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகுள் தளத்தில் ஆபாச விளம்பரங்களுக்கு தடையா? சென்னை ஐகோர்ட்டில் வழக்கு..!