Publish Date: Fri, 02 Aug 2024 (11:07 IST)
Updated Date: Fri, 02 Aug 2024 (11:10 IST)
கடந்த நான்கு நாட்களாக பங்குச்சந்தை படிப்படியாக உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் வீழ்ச்சி அடைந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவில் இருந்து வரும் நிலையில் சற்றுமுன் 73 புள்ளிகள் சார்ந்து என்பதோ 1961 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை அனுப்பி 220 புள்ளிகள் சார்ந்து 24 ஆயிரத்து 780 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களில் உயர்ந்த பங்குச்சந்தை இன்று ஒரே நாளில் இறங்கியதை அடுத்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சி இருந்தாலும் இனி வரும் நாட்களில் பங்குச்சந்தை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறியிருப்பதால் ஆறுதல் அடைந்துள்ளனர்.
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி பஜாஜ் பைனான்ஸ் பாரதி ஏர்டெல் டெக்னாலஜி ஹிந்துஸ்தான் லீவர் ஆகிய பங்குகள் சரிந்து உள்ளது ஆசியன் பெயிண்ட் ஹெச்டிஎஃப்சி வங்கி சன் பார்மா உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது