Publish Date: Fri, 07 Jul 2023 (10:27 IST)
Updated Date: Fri, 07 Jul 2023 (10:29 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டிருந்த நிலையில் இன்று சிறிது அளவு பங்கு சந்தை சரிந்து உள்ளது.
அனைத்து பங்குகளின் விலையும் உச்சத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் லாபத்தை புக் செய்வதால் தான் இன்று பங்குச்சந்தை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இன்று 50 புள்ளிகள் குறைந்து 63 ஆயிரத்து 735 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 15 புள்ளிகள் குறைந்து 19,481 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
பங்குச்சந்தை ஓரளவு குறைந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் பங்குச்சந்தை மீண்டும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.