Publish Date: Thu, 06 Jul 2023 (11:11 IST)
Updated Date: Thu, 06 Jul 2023 (11:13 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது என்பதும் வரலாறு காணாத அளவில் சென்செக்ஸ் 65 ஆயிரத்தை தாண்டியது என்பதையும் பார்த்தோம். அதேபோல் நிப்டி 20 ஆயிரத்தை நெருங்கி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 623 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 18,451 என்ற புள்ளிகளில் வர்த்தகம் வருகிறது.
தொடர்ச்சியாக பங்குச்சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது