Publish Date: Wed, 10 May 2023 (09:44 IST)
Updated Date: Wed, 10 May 2023 (09:45 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று காலையில் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்தாலும் மதியத்திற்கு மேல் திடீரென சரிந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் சரிந்து உள்ளதால் முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 70 புள்ளிகள் சரிந்து 61,690 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 20 புள்ளிகள் சார்ந்து 18,245 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் புதிய முதலீட்டாளர்கள் மிகவும் ஜாக்கிரதியாக முதலீட்டு ஆலோசகர்களை கலந்து ஆலோசித்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.