பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் பெற்றனர் என்பதும், இதனால் உற்சாகமாக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு இன்றைய நிலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
பங்குச்சந்தை இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து, பெரிய அளவில் ஏற்றமும் இல்லை, இறக்கமும் இல்லை என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வெறும் ஒன்பது புள்ளிகள் மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் தேசிய பங்குச்சந்தை நிப்டி 12 புள்ளிகள் குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்குச்சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், சிப்லா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
ஆனால் அதே நேரத்தில், டி.சி.எஸ்., டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, இன்போசிஸ், இண்டஸ்ட் வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், எச்.சி.எல். டெக்னாலஜி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட வங்கி பங்குகளின் விலைகள் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.