Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த வாரத்தில் இன்னும் ஒரு நல்ல நாள்.. பங்குச்சந்தை தொடர் ஏற்றம்..!

Advertiesment
share

Siva

, புதன், 23 ஏப்ரல் 2025 (09:52 IST)
பங்குச்சந்தை எந்த அளவுக்கு தொடர்ச்சியாக சரிந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததோ, அதேபோல் தற்போது பங்குத்தந்தை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்து வருவது மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று மற்றும் நேற்று முன்தினம் 2 நாளும் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில், இன்றும் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 530 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 127 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மீண்டும் சென்செக்ஸ் என்பது ஆயிரத்தை தாண்டி உள்ளது. பங்குச்சந்தை பாசிட்டிவ் நோக்கி செல்வதை குறிப்பதாக பங்குச்சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 152 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 823 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இன்ட் வங்கி, மாருதி, சன் பார்மா, டாட்டா மோட்டார்ஸ், டிசிஎஸ் டெக், மகேந்திரா டைட்டன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. மீண்டும் ரூ.72000 வந்தது ஒரு சவரன்..!