Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2வது நாளாகவும் பங்குச்சந்தை உயர்வு.. மீண்டும் காளையின் பிடியில் வருமா?

Advertiesment
share

Siva

, புதன், 29 ஜனவரி 2025 (10:04 IST)
பங்குச்சந்தை கடந்த திங்கட்கிழமை சரிந்தாலும், செவ்வாய்க்கிழமை ஆன நேற்று ஓரளவு உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியபோது, பாசிட்டிவாக தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்பு, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 272 புள்ளிகள் உயர்ந்து 76,173 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 23,055 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில், விப்ரோ, டெக் மகேந்திரா, டி.சி.எஸ், டாடா ஸ்டீல், ஸ்ரீராம் பைனான்ஸ், இன்போசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது. அதேபோல், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பங்குச்சந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மிக மோசமாக சரிந்த நிலையில், தற்போது மீண்டும் பங்குச்சந்தை காளையின் பிடியில் வந்திருப்பதை அடுத்து, இனி வரும் நாட்களிலும் பாசிட்டிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் 680 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை.. இன்னும் உயரும் என தகவல்..!