Publish Date: Thu, 08 Sep 2022 (09:30 IST)
Updated Date: Thu, 08 Sep 2022 (09:32 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று காலை பங்குச் சந்தை தொடங்கிய நிலையில் 550 புள்ளிகள் வரை உயர்ந்தது 59 ஆயிரத்து 570 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 150 புள்ளிகள் வரை உயர்ந்து 17775 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பங்கு சந்தை சென்செக்ஸ் சரிந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.