Publish Date: Tue, 13 Jun 2023 (10:17 IST)
Updated Date: Tue, 13 Jun 2023 (10:19 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென சரிந்த நிலையில் இன்று சுமார் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி சென்சக்ஸ் 63 ஆயிரத்து தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 345 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 66 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி சுமார் 100 புள்ளிகள் அதிகரித்து 18,697 என்ற புள்ளிகளில் வர்த்தகம் மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை இன்று நல்ல அளவில் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.