Publish Date: Mon, 12 Jun 2023 (09:40 IST)
Updated Date: Mon, 12 Jun 2023 (09:42 IST)
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 30 புள்ளிகள் உயர்ந்து 62,654 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 18,575 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. பங்குச்சந்தை இன்று காலை உயர்ந்தாலும் குறைந்த அளவே உயர்ந்துள்ளதால் மதியத்திற்கு மேல் சரிய வாய்ப்பு இருப்பதால் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனையின் பேரில் முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.