Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம்: சென்செக்ஸ் 59 ஆயிரத்தை தாண்டுமா?

Share
, வியாழன், 6 அக்டோபர் 2022 (09:31 IST)
பங்குச்சந்தை நேற்று விடுமுறையாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் 1200 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்தது 
 
இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சற்றுமுன் மும்பை பங்கு சந்தை தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 58 440 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இன்று அல்லது நாளை சென்செக்ஸ் 59 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 125 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 400 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துர்கா சிலை கரைத்தபோது துயரம்.. வெள்ளத்தில் மக்கள்! – ஷாக்கிங் வீடியோ!