Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீரென 1100 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் இன்ப அதிர்ச்சி!

sensex
, செவ்வாய், 4 அக்டோபர் 2022 (09:35 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் கடந்த வெள்ளிக்கிழமை ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது என்பதையும் நேற்று சுமார் 400 புள்ளிகள் சரிந்தது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று திடீரென 1100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 1175 புள்ளிகள் உயர்ந்து 57950 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் நிஃப்டி 340 புள்ளிகள் உயர்ந்து 17230 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
திடீரென  சென்செக்ஸ் ஆயிரத்து 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூய்மை நகரங்கள் பட்டியல்: மதுரைக்கு கடைசி இடம், சென்னைக்கு எந்த இடம்?