Publish Date: Mon, 28 Aug 2023 (10:20 IST)
Updated Date: Mon, 28 Aug 2023 (10:21 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 85 புள்ளிகள் உயர்ந்து 64 ஆயிரத்து 976 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 39 புள்ளிகள் உயர்ந்து 19,305 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் ஏற்ற இறக்கத்துடன் நான் இருக்கும் என்றும் எனவே புதிதாக வர்த்தகம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.