Publish Date: Wed, 30 Aug 2023 (10:00 IST)
Updated Date: Wed, 30 Aug 2023 (10:01 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்றும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கிய நிலையில் மும்பை பங்கு சந்தை 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 65 ஆயிரத்து 380 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 19,427 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. பங்குச்சந்தை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பங்குச்சந்தை மீண்டும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை இனிவரும் நாட்களிலும் அதிக அளவில் உயரவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது