Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாற்று உச்சம் செல்லும் பங்குச்சந்தை: 64 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (09:27 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருந்து வருகிறது என்பதும் மும்பை பங்குச்சந்தை 63,000 அதிகமாக விற்பனை ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று சுமார் 400 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்று ஆரம்பத்திலேயே 170 புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே ரீதியில் சென்செக்ஸ் 64 ஆயிரத்தை இன்னும் ஓரிரு நாளில் நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
இன்றைய பங்குச்சந்தை  வர்த்தகத்தில் சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 590 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி ஐம்பது புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 18,870 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருப்பதால் அதில் முதலீடு செய்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments