Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேற்றைய ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு..!

Share Market
, செவ்வாய், 16 மே 2023 (09:33 IST)
நேற்று பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்று திடீரென சென்செக்ஸ் சரிந்து உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 62,243 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 18,376 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிப்டி நேற்றைவிட இன்று 25 புள்ளிகள் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று கவனத்துடன் முதலீடு செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் போட தயார்: மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!