Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக ஏற்றம்: மீண்டும் 61 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:32 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று சுமார் 700 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 50 புள்ளிகள் அதிகமாக உள்ளது என்பதும் தற்போது 60 ஆயிரத்து 600 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 21 புள்ளிகள் அதிகரித்து 18035 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை நேற்றும் இன்றும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எப்போது வேண்டுமானாலும் சரிய வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments