பைக் ரேஸ் செய்தால் பைக் பறிமுதல்; பெற்றோர் மீது வழக்கு!? – காவல்துறை எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:26 IST)
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பைக் ரேஸர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தயாராகி வருகிறது. சென்னையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு சமயத்தில் இளைஞர்கள் பலர் பொதுசாலைகளில் பைக் ரேஸ் செய்வது சமீப காலமாக பெரும் பிரச்சினையாக உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது. அதில் சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர்களது பெற்றோர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments