Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை நிலவரம் எப்படி? சென்செக்ஸ், நிப்டி அப்டேட்..!

Advertiesment
பங்குச்சந்தை

Siva

, திங்கள், 3 நவம்பர் 2025 (10:03 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சிறிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது. பங்குச்சந்தை இன்னும் நன்றாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 18 புள்ளிகள் உயர்ந்து 83,901 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 25,730 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் உயர்வு கண்ட பங்குகள்: அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இண்டிகோ, ஜியோ ஃபைனான்ஸ், ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் ஃபார்மா உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
 
இதேபோல், சரிவு கண்ட பங்குகள்: அதானி போர்ட்ஸ், ஆசியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ், ஐடிசி, மாருதி, டாட்டா ஸ்டீல், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, டைட்டன் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டரை வருடம் முடிந்துவிட்டது.. முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா? டெல்லியில் டிகே சிவகுமார்